இன்று இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 165 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 15 பகுதியை 76 வயதான ஆண் ஒருவரும், சிலாபத்தில் 72 வயதான ஆண் ஒருவரும், மஹரகமயில் 50 வயதான ஆண் ஒருவரும், வத்துபிட்டிவல பகுதியில் 86 வயதான ஆண் ஒருவரும், மக்கொனையில் 86 வயதான பெண் ஒருவரும் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்ததாக தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.