இலங்கையில் இன்று 312 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் 300 பேர் ஏற்கனவே கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய 12 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இலங்கையில் இதுவரையில் 35,049 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.