இனிவரும் காலங்களில் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை செய்யும் திட்டத்தை இந்தியா மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளதாம்.
இத்தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் செயலாளர் அபூர்வா சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போது நடைமுறையில் உள்ளது போன்று வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை செய்ய வேண்டும், அதில் எந்தவித மாற்றமும் இல்லை.
ஆனால் வேலை நேரத்தில் மட்டும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் என்றால் 4 நாட்களும், 10 மணிநேரம் என்றால் 5 நாட்களும், 8 மணிநேரம் என்றால் 6 நாட்களும் வேலை செய்ய வேண்டும்.
இதில் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கும் எந்தவித நிர்பந்தமும் இல்லை.
மாறி வரும் பணி தொடர்பான கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், வேலைவாய்ப்புகள் பறிபோகலாம் என வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.