சுமார் 80 லட்சம் ரூபா பெறுமதியான குஷ் ரக போ.தைப்பொருட்கள் அடங்கிய பொதி சீதுவையில் உள்ள சுங்க பொருள் விடுவிப்பு பகுதியிலிருந்து மீ.ட்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் ச.ட்டவிரோதமாக நாட்டுக்கு கடத்தப்பட்ட போ.தைப்பொருளையே கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர்
குளிர்பானம் தயாரிக்கும் இயந்திரத்துடன் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுங்க தரப்பினரால் அந்த போ.தைப்பொருட்கள் மீட்கப்பட்டன.
அந்த இயந்திரத்தை பலகை பெட்டி ஒன்றில் வைத்து, குறித்த போ.தைப்பொருட்கள் கொழும்பிலுள்ள போலியான முகவரி ஒன்றுக்கு அனுப்பப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அந்தப் பொதியை பெற்றுக்கொள்வதற்கு எவரும் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் அந்த பலகை பொதியை பரிசோதித்துள்ளனர்.
1200 கிலோகிராம் ‘குஷ்’ போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி 80 இலட்சம் ரூபா என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குஷ் ரக போ.தைப்பொருட்கள் மீ.ட்கப்பட்டுள்ள நிலையில், அதனை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.