வடக்கில் இன்று இதுவரை ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
இன்று சனிக்கிழமை(30) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 247 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் வடமாகாணத்தில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதன்படி, வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.