இலங்கையில் இன்றைய தினம் 737 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 59,167 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50,337 ஆக அதிகரித்துள்ளது.