இலங்கையில் இன்றைய தினம் 787 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் 56,863 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து 48,617 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது.