கல்லாறு முனையை அண்மித்த கடல் பரப்பில் சுமார் ஒரு கோடி பெறுமதியான மஞ்சள் பொதியுடன் இந்தியர்கள் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லாறு முனையிலிருந்து சுமார் 27 மைல் தொலைவில் இந்திய படகின் மூலம் மஞ்சளை நாட்டிற்குள் கடத்த முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த படகில் 2404 கிலோ 300 கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.