வவுனியா கூமாங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்றை வவுனியா காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்றுள்ள சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 26 வயதான இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த பெண் நேற்று மாலை அவரது வீட்டில் இருந்த நிலையில் தூக்கில்தொங்கியநிலையில் சடலமாக அவதானிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வவுனியா காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.