இலங்கையில் இன்றைய தினத்தில் மட்டும் 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 53,062 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இன்றைய தினத்தில் மட்டும் கொரோனா தொற்றினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய. நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 264ஆக அதிகரித்துள்ளது.