நாயிடமிருந்து தப்பிக்க வாத்து ஒன்று நடித்த விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா, காடுகளில் நடைபெறும் சுவாரசிய சம்பவங்கள், விலங்குகளின் குறும்பு வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் அடிக்கடி பதிவிடும் வீடியோக்கள் விலங்குகள் ஆர்வலர்கள் மற்றும் இணையவாசிகள் இடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
அந்தவகையில் நாயிடம் இருந்து தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள வாத்து ஒன்று இறந்ததுபோல் நடித்து தப்பிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Playing dead is a behavior in which animals take on the appearance of being dead.
This form of animal deception is an adaptive behavior also known as tonic immobility or thanatosis. Apparent death can be used as a defense mechanism or as a form of aggressive mimicry by animals. pic.twitter.com/58bCTFwoCO
— Susanta Nanda IFS (@susantananda3) January 10, 2021
இதுகுறித்து பதிவிட்ட அவர், ‘இது டானிக் அசைவற்ற தன்மை அல்லது தானடோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. தானாடோசிஸ் என்பது விலங்கு இறந்துவிட்டதாக பாசாங்கு செய்வதை குறிக்கின்றது. தானடோசிஸின் நிகழ்வு பாலூட்டிகள் முதல் பூச்சிகள் வரை பல விலங்குகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறை.
உதாரணமாக, பூச்சிகள் தானடோசிஸ் நிலையில் இருந்தால் குருவிகள் இறந்தவற்றில் மீது கவனம் செலுத்துவதில்லை. அதேபோல் ஒரு குருவி தானடோசிஸ் நிலையில் இருந்தால் பூனை அதனை உண்ணாமல் விட்டு விடுகின்றது’ என சுசந்தா நந்தா பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.