யாழ்.பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டமைக்கும் இராணுவத்தினருக்கும் எவ்வித தொடர்புமில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் கூறுகையில்,
யாழ். பல்கலைக்கழகத்தின் நினைவிடம் இடிக்கப்பட்டமையானது, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானம் ஆகும்.
அந்த விடயத்திற்கும் தமக்கும் அணுவளவேனும் தொடர்பு கிடையாது என்றும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் இந்த விடயத்தில் தலையீட போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பல்கலைக்கழகத்திற்குள் அமைதியின்மை ஏற்பட்டு, காவல்துறையினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாத பட்சத்தில் மாத்திரமே, தம்மால் அந்த விவகாரத்தில் தலையீட முடியும் என கூறிய அவர், அதுவரை தம்மால் பல்கலைக்கழக விவகாரத்தில் தொடர்புப்பட முடியாது எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.