யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்றைய தினம் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ் பல்கலைக்கழக சட்டபீடத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சில தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தினை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொண்டது என துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்திருக்கிறார்.
இந்தநிலையில், அதனை விஸ்வநாதன் காண்டீபன் இவர் தலைமையில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டனர்.
இதனால், பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு நிலை நேற்றைய தினம் இரவு எட்டு மணி தொடக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், யாழ் பல்கலைக்கழக சட்டபீடத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தனது டுவிட்டர் பக்கத்தில் சில தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
The previous VC was sacked because he didn't demolish the monument. I have concrete reasons to believe that one of the pre-conditions for appointment of the new VC by the incumbent President was demolition of this monument.
https://t.co/RD2pb6ILkH— K. Guruparan (@rkguruparan) January 8, 2021
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
முன்னைய உபவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் பதவி நீக்கப்பட்டமைக்கு அவர் நினைவிடத்தை நிர்மூலமாக்காமையே காரணமாகும்.
தற்போதைய ஜனாதிபதியால் புதிய உபவேந்தர் நியமிக்கப்பட்டமைக்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாக நினைவிடத்தை நிர்மூலமாக்கவேண்டும் என்ற விடயம் உள்ளது என்பதை நம்புவதற்கு என்னிடம் உறுதியான காரணங்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.