யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
குறித்த சம்பவம் இன்று மாலை 5.20 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னாரிலிருந்து – யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தும், யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஹயஸ் வாகனமும் நேருக்கு நேர் மேதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஹயஸ் வாகனத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.