இலங்கையில் இன்றைய தினத்தில் 771 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் 592 பேர் ஏற்கனவே கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏனைய 66 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43,473 ஆக அதிகரித்துள்ளது.