தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்து கொள்ளமாறு வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.காண்டீபன் தெரிவித்தார்.
தற்போதைய அவசர நிலை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொதுமக்கள் முடிந்த அளவு வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் அவசியத்தேவையை தவிர வைத்தியசாலைக்கு வருவதை முற்றாக தவிர்க்கவும்.
வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர் அவசர சிகிச்சைப் பிரிவிலும் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை வெள்ளிக்கிழமை இரவு உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் அவரை கொரோனா மேலதிக சிகிச்சைக்காக நேற்று மாலை அனுராதபுரம் மித்சிறிசெவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்கள், 12 தாதியர்கள் 9 உதவியாளர் பேர் என 26 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் அனுராதபுரம் பகுதியில் உள்ள வைத்தியசாலை விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த பெண் தங்கி சிகிச்சை பெற்ற நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்ற 47 நோயாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.வவுனியா வைத்தியசாலையில் நோயாளர் விடுதி இலக்கம் 8 மற்றும் அவசர சிகிச்சை பிரிவு என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும் மாதாந்த மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் நோயாளர்கள் மாவட்ட வைத்தியசாலைக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொண்ட பின்னர் வருகை தரவும்.
அத்துடன் வைரஸ் தாக்கத்தினை கருத்தில் கொண்டு வைத்தியசாலை வளாகத்தினை தொற்று நீக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவித்தார்.