இலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் 593 பேருக்கு கொவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை 36,692 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,375 ஆக அதிகரித்துள்ளது.