இவங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 579 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட்-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட்-19 கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 34,960 ஆக அதிகரித்துள்ளது.