இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (20) மேலும் 618 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில் 29,300 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.